Wednesday 18 April 2012

சமச்சீர் கல்வி புத்தகங்களுக்கு தட்டுப்பாடு


சென்னை: நடப்பு கல்வியாண்டில், ஒன்பதாம் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்புக்கு செல்லும் தனியார் பள்ளி மாணவ, மாணவியர், சமச்சீர் கல்வி புத்தகம் கிடைக்காமல் அவதியுறுகின்றனர்.

தமிழகத்தில், 53 ஆயிரத்து 890 பள்ளிகள், மாநிலம் முழுவதும் உள்ளன. 10ம் வகுப்பு வரை மாநில பாடத்திட்டம், மெட்ரிக்குலேஷன், ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓரியண்டல் என, நான்கு வகையான கல்வித் திட்டங்கள் அமலில் இருந்தன. கடந்த ஆட்சியில், சமச்சீர் கல்வித் திட்டம் அறிமுகமானது. முதன்முறையாக, சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழ், அனைத்து பள்ளிகளிலும் தற்போது, முழு ஆண்டு தேர்வு நடந்து வருகிறது.

ஒன்பதாம் வகுப்பு தேர்வெழுதி, விடுமுறை நாளை அனுபவிக்க வேண்டிய தனியார் பள்ளி மாணவ, மாணவியர், பத்தாம் வகுப்புக்கான சிறப்பு வகுப்புக்காக, பள்ளிக்கு சென்று வருகின்றனர். அடுத்த கல்வியாண்டில், எஸ்.எஸ்.எல்.சி., பொது தேர்வெழுத வேண்டிய இவர்களுக்கு, இப்போதே பள்ளிகள் திறந்து விட்டன. இவர்கள், 10ம் வகுப்புக்கான சமச்சீர் கல்விப் புத்தகம் இல்லாமல் திண்டாடுகின்றனர்.
அடுத்த கல்வியாண்டில் நல்ல தேர்ச்சி சதவீதத்தை எடுக்க, தனியார் பள்ளிகள் முயற்சி மேற்கொண்டுள்ள நிலையில், புத்தகமின்றி மாணவ, மாணவியர் பள்ளிக்கு சென்று வருகின்றனர். பழைய பத்தாம் வகுப்பு புத்தகங்களை தேடி, பெற்றோர் அலைகின்றனர். பழைய எஸ்.எஸ்.எல்.சி., புத்தகங்களுக்கு, மாநிலம் முழுவதும், மவுசு அதிகரித்துள்ளது. புத்தகம் கிடைக்காத சூழலில், பழைய புத்தகங்களை ஜெராக்ஸ் எடுக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு நர்சரி, ப்ரைமரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் சங்க மாநில பொது செயலர் நந்தகுமார் கூறியதாவது: தனியார் பள்ளிகளுக்கு, பத்தாம் வகுப்பு பாடப் புத்தகங்கள் இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை. முப்பருவ கல்வி திட்டத்தின்கீழ், காலாண்டு, அரையாண்டு மற்றும் முழு ஆண்டு என, ஒரே புத்தகம் கிடைக்கவில்லை. அச்சாகி கொண்டிருப்பதால், மே 15ம் தேதிக்கு மேல் கிடைக்குமென கூறுகின்றனர்.
இது எந்தளவுக்கு நிஜம் என தெரியவில்லை. கடந்தாண்டில் மீதம் உள்ள புத்தகங்கள் வைத்திருக்கும் ஒரு சில தனியார் பள்ளிகள், எப்படியோ சமாளித்து விடுகின்றன. அரசு பள்ளிக்கு சமச்சீர் கல்வி புத்தகம் கொடுத்தது போக, மீதமுள்ள புத்தங்களைத்தான், தனியார் பள்ளிக்கு கொடுக்கின்றனர். உடனடியாக புத்தகங்கள் கிடைக்க, தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

iQOO Neo 7: An Affordable High-Performance Smartphone

  iQOO is a brand that has quickly gained popularity in the smartphone market for its affordable high-performance devices. The iQOO Neo 7 is...