Monday 30 April 2012

பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வு 7,000 விண்ணப்பங்கள் விற்பனை


திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் தகுதி தேர்வு எழுத
மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். இதுவரை, 7,000 விண்ணப்பங்கள் விற்றுத்
தீர்ந்துள்ளன. அதனால், இன்னும் 3,000 விண்ணப்பங்கள் அனுப்பி வைக்குமாறு
ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பட்டதாரிகளுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு
விண்ணப்பங்கள், மாவட்ட கல்வி அலுவலகம் மூலம் வினியோகிக்கப்படுகின்றன.
முதல்கட்டமாக, கடந்த 23ம் தேதி விண்ணப்பம் வினியோகிக்கப்பட்டது.
பல்லடம், உடுமலை, தாராபுரம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆசிரிய பட்ட
தாரிகள், பள்ளி ஆசிரியர்கள் திரண்டு வந்தனர். குறைந் தளவு விண்ணப்பங்களே
இருந்ததால், போட்டி போட்டுக்கொண்டு விண்ணப்பம் வாங்கிய கூட்டத்தால்,
மாவட்ட கல்வி அலுவலகத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது; மூன்று மணி
நேரத்துக்குள் 2,500
விண்ணப்பங்களும் விற்றுத்தீர்ந்தன.
இரண்டாம் கட்டமாக, தேவாங்கபுரம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நேற்று
விண்ணப்பம் வழங்கப்பட்டது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 5,000க்கும்
மேற்பட்டோர் வந்திருந்தனர். தேவாங்கபுரம் பள்ளி முதல் காலேஜ் ரோடு வரை
நீண்ட வரிசையில் பட்டதாரி ஆசிரியர்கள் காத்திருந்தனர். மூன்று கவுன்டர்
அமைத்து, போலீஸ் பாதுகாப்புடன் விண்ணப்பம் வழங்கப்பட்டது. காலை 10.00 முதல்
12.00 மணிக்குள், 4,500 விண்ணப்பங்களும் விற்றுத்தீர்ந்தன. விண்ணப்பம்
கிடைக்காதவர்களுக்கு அடுத்தகட்டமாக
விண்ணப்பம் வழங்குவதாக கல்வி அதிகாரிகள்
உறுதியளித்தனர்.
மாவட்ட கல்வி அலுவலர் ஜெயலட்சுமி கூறுகையில், எதிர்பார்த்ததைவிட, ஆசிரியர் தகுதி தேர்வு
விண்ணப்பம் பெற, திருப்பூரில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இன்னும் 3,000
விண்ணப்பங்கள் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் தெரிவித்துள்ளோம். இன்று
(நேற்று) இரவு அல்லது நாளை (இன்று) காலை விண்ணப்பம் வந்ததும், உடனடியாக
வழங்கப்
படும், என்றார்.

No comments:

Post a Comment

iQOO Neo 7: An Affordable High-Performance Smartphone

  iQOO is a brand that has quickly gained popularity in the smartphone market for its affordable high-performance devices. The iQOO Neo 7 is...