Monday 30 April 2012

இடைநிலை ஆசிரியர்கள் மாறுதல் விண்ணப்பம்: 30ம் தேதிக்குள் அளிக்க ஆசிரியர்களுக்கு உத்தரவு


திருநெல்வேலி:தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் பொதுமாறுதல் விண்ணப்பங்களை வரும் 30ம் தேதிக்குள் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தயாராக இருக்க மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் ஆசிரியர்கள் பொது இட மாறுதல் கவுன்சிலிங் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படுகிறது. இதில் தகுதியானவர்களுக்குஇடமாறுதல் ஆணைகள் வழங்கப்படுகிறது. இதில் 2012-13ம் ஆண்டில் இட மாறுதல் கோரும் இடைநிலை ஆசிரியர்கள் வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


இதுதொடர்பான உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் நடப்பாண்டில் இடைநிலை ஆசிரியர்கள் பொது இட மாறுதல் விண்ணப்பங்களை வரும் 30ம் தேதிக்குள் அந்தந்த உதவி தொடக்க கல்வி அலுவலர்களிடம் அளிக்க வேண்டும். வரும் மே மாதம் 5ம் தேதிக்குள் இந்த விண்ணப்பங்களை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் பெற்று மே மாதம் 7ம் தேதிக்குள் இதனை சரி பார்க்க வேண்டும்.

வரும் 10ம் தேதிக்குள் மாவட்ட மாறுதல் கோரும் ஆசிரியர்களின் விண்ணப்பங்களை பரிசீலித்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்ப வேண்டும்.2012-13ம் ஆண்டில் ஆசிரியர் மாறுதல் விண்ணப்பங்களை பெற்று தயார் நிலையில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் இருக்க வேண்டும்.
விண்ணப்பத்தில் ஆசிரியர்களின் முழு விபரம், ஒன்றியத்திற்குள் மாறுதல், பிற ஒன்றியத்திற்குள்மாறுதல், பிற மாவட்ட மாறுதல், அலகு விட்டு அலகு மாறுதல் தகவல்களை தெரிவிக்க வேண்டும். சிறப்பு முன்னுரிமை கோரினால் அதுதொடர்பான விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் ஆசிரியர்களிம் உரிய உறுதிமொழியையும் பெற்று கொள்ள வேண்டும்.
இவ்வாறு அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆசிரியர்கள் பொது இட மாறுதல் தொடர்பாக விரைவில் அரசாணை வெளியிடப்படுகிறது. இந்த அடிப்படையில் இட மாறுதல் கவுன்சிலிங் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படுகிறது.திருநெல்வேலி:தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் பொதுமாறுதல் விண்ணப்பங்களை வரும் 30ம் தேதிக்குள் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தயாராக இருக்க மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் ஆசிரியர்கள் பொது இட மாறுதல் கவுன்சிலிங் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படுகிறது. இதில் தகுதியானவர்களுக்குஇடமாறுதல் ஆணைகள் வழங்கப்படுகிறது. இதில் 2012-13ம் ஆண்டில் இட மாறுதல் கோரும் இடைநிலை ஆசிரியர்கள் வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பான உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் நடப்பாண்டில் இடைநிலை ஆசிரியர்கள் பொது இட மாறுதல் விண்ணப்பங்களை வரும் 30ம் தேதிக்குள் அந்தந்த உதவி தொடக்க கல்வி அலுவலர்களிடம் அளிக்க வேண்டும். வரும் மே மாதம் 5ம் தேதிக்குள் இந்த விண்ணப்பங்களை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் பெற்று மே மாதம் 7ம் தேதிக்குள் இதனை சரி பார்க்க வேண்டும்.

வரும் 10ம் தேதிக்குள் மாவட்ட மாறுதல் கோரும் ஆசிரியர்களின் விண்ணப்பங்களை பரிசீலித்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்ப வேண்டும்.2012-13ம் ஆண்டில் ஆசிரியர் மாறுதல் விண்ணப்பங்களை பெற்று தயார் நிலையில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் இருக்க வேண்டும்.
விண்ணப்பத்தில் ஆசிரியர்களின் முழு விபரம், ஒன்றியத்திற்குள் மாறுதல், பிற ஒன்றியத்திற்குள்மாறுதல், பிற மாவட்ட மாறுதல், அலகு விட்டு அலகு மாறுதல் தகவல்களை தெரிவிக்க வேண்டும். சிறப்பு முன்னுரிமை கோரினால் அதுதொடர்பான விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் ஆசிரியர்களிம் உரிய உறுதிமொழியையும் பெற்று கொள்ள வேண்டும்.
இவ்வாறு அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆசிரியர்கள் பொது இட மாறுதல் தொடர்பாக விரைவில் அரசாணை வெளியிடப்படுகிறது. இந்த அடிப்படையில் இட மாறுதல் கவுன்சிலிங் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படுகிறது.

No comments:

Post a Comment

iQOO Neo 7: An Affordable High-Performance Smartphone

  iQOO is a brand that has quickly gained popularity in the smartphone market for its affordable high-performance devices. The iQOO Neo 7 is...