Wednesday 18 April 2012

மீதமுள்ள 2 தேர்வுகளைக் கண்காணிக்க இணை இயக்குநர்கள் நியமனம்.

திருவண்ணாமலை தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு கணிதப் பாடத் தேர்வின்போது முறைகேடு நடைபெற்றுள்ளதையடுத்து, மீதமிருக்கும் 2 தேர்வுகளையும் கண்காணிக்க பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர்கள் தலைமையில் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
அந்தப் பள்ளியில் நடந்த முறைகேடு குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விசாரணை நடத்தி வந்தாலும், அரசுத் தேர்வுகள் இயக்ககம் சார்பிலும் விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது.
அறிவியல் பாடத் தேர்வு வியாழக்கிழமையும் (ஏப்ரல் 19), சமூக அறிவியல் தேர்வு திங்கள்கிழமையும் (ஏப்ரல் 23) நடைபெற உள்ளன. மாநிலம் முழுவதும் இந்த இரண்டு தேர்வுகளையும் முறையாக நடத்துவதற்கு அரசுத் தேர்வுகள் இயக்ககம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

No comments:

Post a Comment

iQOO Neo 7: An Affordable High-Performance Smartphone

  iQOO is a brand that has quickly gained popularity in the smartphone market for its affordable high-performance devices. The iQOO Neo 7 is...