Monday 31 December 2012

பள்ளி மாணவர்களுக்கு தேசிய திறனாய்வு தேர்வு விரைவில் தேர்வு முடிவு வெளியாகும்

பள்ளி மாணவர்களுக்கு தேசிய திறனாய்வு தேர்வு விரைவில் தேர்வு முடிவு வெளியாகும்பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நடந்த தேசிய திறனாய்வு தேர்வில் மொத்தம் 465 பேர் தேர்வு எழுதினர்.

தொடக்கக் கல்வி - பள்ளி வயது குழந்தைகள் அனைவரையும் பள்ளிகளில் சேர்த்தல் - தமிழக அரசின் நலத்திட்டங்களை முன்னிறுத்தி "அரசுப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கையை அதிகப்படுத்துதல்" - தமிழகம் முழுவதும் சேர்க்கை மற்றும் விழிப்புணர்வு முகாம், பேரணி மற்றும் விழா நடத்த உத்தரவு.

Friday 30 November 2012

EXCELLENCE AWARD TO GHSS SATHIYAMANGALAM, VILLUPURAM DT

First prize at District level science exhibition and excellence award to students of Sathiyamangalam GHSS,Y.Duraikumar X Std , T.Prasanth Xth standard, S.Sethuraman Xth standard for preparation and presentation of EDUSAT mini model with live video display and the teachers S.Dhilip and K.Yogasundaram who guided the students had been appreciated by Tindivanam DEO Mr Arumugam, Modaiyur Headmaster Mr S.Elumalai and Headmaster Mr N.Munusamy

Saturday 24 November 2012

தொடக்கக்கல்வி - டிசம்பர் 7- அனைத்து பள்ளிகளிலும் கொடி நாள் கடைப்பிடித்தல் மற்றும் வழிமுறைகள் குறித்த அரசுக் கடிதம்

அகஇ - செயல்வழிக்கற்றல் அட்டைகள் - மாநில அளவிலான கருத்தாளர்களுக்கு இரண்டு நாள் பணிமனை நடத்துதல் சார்பு

மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் - எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக்கற்றல்(SABL Training) - மாநில அளவிலான கருத்தாளர் பயிற்சி நடத்துதல் சார்பு

தொடக்கக்கல்வி - உதவிபெறும் பள்ளிகள் - பட்டியல் தொகுக்கும் பணிக்கு பணியாளர் வருகை புரிய இயக்குனர் உத்தரவு.

தொடக்கக்கல்வி - 2012ஆம் தேசிய நல்லாசிரியர் விருது - விருது பெறுவதற்கு தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்து கருத்துருக்களை அனுப்ப கோருதல் சார்பு.

பள்ளிக் கல்வி - பள்ளிகளில் பயிலும் மாணவ/ மாணவிகளின் பாதுகாப்பு - பள்ளி வளாகம், அதன் சுற்றுப்புறம் மற்றும் வாகனங்கள் பராமரித்தல் - பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் - ஆணை வெளியீடு

அகஇ - உள்ளடங்கிய கல்வி - பள்ளிகளில் "உள்ளடங்கிய கல்வி விளையாட்டு விழா" செயல்பாடுகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் சார்பு

Sunday 28 October 2012

DEE - RIESI TRAINING AT BENGALURU - VENUE REGARDING

தொடக்கக் கல்வி - மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் / உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக் கான பணி இலக்குகள் மற்றும் பணிச் சார்ந்த செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடத்துதல் சார்பு.

அனைவருக்கும் கல்வி இயக்கம் - பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் மாதம் ஒரு முறை கடைசி வாரம் நடத்த தலைமையாசிரியர்களுக்கு உத்தரவு.

அனைவருக்கும் கல்வி இயக்கம் - பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் மாதம் ஒரு முறை கடைசி வாரம் நடத்த தலைமையாசிரியர்களுக்கு உத்தரவு.

ஆசிரியர்த் தகுதித் மறுதேர்வு முடிவு ஓரிரு நாளில் வெளியீடு

டி.இ.டி. மறுதேர்வு முடிவுகள் தயாரிக்கும் பணி 95 சதவீதம் முடிவடைந்துள்ளது. எனவே தேர்வு முடிவுகள் நாளையோ, திங்கட்கிழமையோ வெளியாகலாம் என டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Wednesday 3 October 2012

140 சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு கல்வித்துறை அனுமதி

மெட்ரிகுலேஷன் பள்ளி நடத்துவதில், பல்வேறு தொடர் நெருக்கடிகள் இருந்து வருவதால், சி.பி.எஸ்.இ., பள்ளிகளை துவங்க, தனியார் பள்ளி நிர்வாகிகள், ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும், 140 சி.பி.எஸ்.இ., பள்ளிகள் துவங்க, பள்ளிக் கல்வித்துறை, தடையில்லா சான்று வழங்கியுள்ளது.
சமச்சீர் கல்வி திட்டம் வருவதற்கு முன், நான்கு வகை கல்வித் திட்டங்கள் அமலில் இருந்தன. இதில், இந்தி, பிரெஞ்ச் உள்ளிட்ட மொழிகளை, மொழிப்பாடமாக கற்பதற்கு, வழிவகை இருந்தது. சமச்சீர் கல்வி திட்டத்தில், அதற்கு வழியில்லை. இந்தி மொழியை, மொழிப் பாடமாக கற்க முடியாது. அதை, ஒரு விருப்பப் பாடமாகத் தான் கற்க முடியும்.

கல்வி உதவித் தொகை பிரச்சனையில் சஸ்பெண்டான 77 தலைமையாசிரியர்கள் இன்னும் ஒரு வாரத்தில் பணிக்கு திரும்புவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கல்வி உதவித்தொகை மோசடியில் சஸ்பெண்டான 77 தலைமை ஆசிரியர்கள் விரைவில் பணிக்கு திரும்ப உள்ளதாக ஆசிரியர்கள் வட்டாரங்கள் தெரிவித்தன. நாமக்கல் மாவட்டத்தில் கல்வி உதவித்தொகை 81 லட்சம் முறைகேடு செய்ததாக 77 தலைமை ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இவர்களில் 51 பேர் பெண்கள். இந்த முறைகேடுக்கு துணைபோன மாவட்ட ஆதிதிராவிடநல அலுவலர் ராமசந்திரன், கண்காணிப்பாளர் உமாபதி ஆகியோரும் அடுத்தடுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

அனைத்துப் பள்ளிகளிலும் அடிப்படை வசதி: மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவு

அனைத்துப் பள்ளிகளிலும் குடிநீர், கழிவறை வசதிகள் போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லாப நோக்கற்ற சுற்றுச்சூழல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்தியாவில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Tuesday 25 September 2012

பள்ளிக்கல்வி - அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் கூடுதல் மாநில திட்ட இயக்குனர் என்ற பதவியை திட்ட இயக்குனர் என்று பெயர் மாற்றி அரசு உத்தரவு.

27, 28, 29 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ள ஒரு நாள் RTE ACT சார்பான பயிற்சியை இரத்து செய்ய கோரி தொடக்கக் கல்வி இயக்குனர், மாநில கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவன இயக்குனருக்கு ஆசிரியர் சங்கம் சார்பாக எழுதிய கடித விவரம்

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - 2009 விதிகள்,அரசாணைகள் மற்றும் வழிக்காட்டு நெறிமுறைகள் சார்ந்த பயிற்சி - Powerpoint Presentation Slide Show

அனைவருக்கும் கல்வி இயக்கம் - 2065 தொடக்கப் பள்ளிகளில் மேற்கொண்ட அடைவுத் திறன் நடைபெற்ற விவரங்களை தொகுத்த அனுப்ப மாநில திட்ட இயக்குனர் உத்தரவு.

பள்ளிக்கல்வி - மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் அதனையொத்த பணியிடங்களுக்கு பதவி உயர்வு மூலம் நிரப்புதல் 2012 ஆம் ஆண்டிற்கான தேர்ந்தோர்ப் பட்டியல் தயாரித்தல் - DEO பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டதற்க் கான அரசாணைகள் கோரி உத்தரவு.

Saturday 15 September 2012

பள்ளிக்கல்வி - அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி 6872 பட்டதாரி ஆசிரியர் கூடுதல் பணியிடங்களுக்கான பாட வாரியாக அனுமதிக்கப்பட வேண்டிய பள்ளிகளின் பட்டியலுக்கு ஒப்புதல் வழங்கி தமிழக அரசு உத்தரவு.

அக்டோபர் 3-ந் தேதி ஆசிரியர் தகுதி தேர்வு: தோல்வி அடைந்தவர்களுக்கு மறுதேர்வு நடத்த முடியாது விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யும்படி அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

 ஏற்கனவே தேர்வு எழுதி தோல்வி அடைந்தவர்களுக்கு அக்டோபர் 3-ந் தேதி நடத்தப்படும் தேர்வில் புதிய விண்ணப்பதாரர்களையும் அனுமதிஅளிப்பது குறித்து விரிவான பதில் மனுவை தமிழக அரசு தாக்கல் செய்யவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.ஆசிரியர் தகுதி தேர்வுசென்னை சூளையை சேர்ந்த ஏ.யாமினி என்பவர், சென்னை
ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-மத்திய அரசு கொண்டு வந்துள்ள கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, ஆசிரியராக பணியில் சேர தகுதி தேர்வில் கண்டிப்பாக தேர்ச்சி பெற்று இருக்கவேண்டும்.

அனைவருக்கும் கல்வி இயக்கம் - ஆசிரியர்கள் கையெழுத்து மற்றும் கரும்பலகையில் எழுதும் திறன் மேம்படுத்தும் 8நாட்கள் பயிற்சி - மாவட்டத்திற்கு ஒரு தொடக்க / உயர்தொடக்கநிலை ஆசிரியர் பெயர் பட்டியல் கோரி உத்தரவு.

Saturday 1 September 2012

ஆசிரியர் கூட்டமைப்பு கூட்டம்

கரூரில் மாவட்ட உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு கூட்டம், தமிழாசிரியர் கழக தலைவர் வள்ளிராசன் தலைமையில் நடந்தது.

தொடக்கக் கல்வி - வழக்கு - ஊராட்சி ஒன்றிய பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் சார்பாக பெறப்பட்ட நீதிமன்ற வழக்குகள் சார்ந்து மாவட்ட அளவில் ஆய்வு கூட்டம் நடத்தி அறிக்கையை இயக்ககத்திற்கு அனுப்ப உத்தரவு.

தமிழ்நாடு பள்ளிக்கல்வி பணி - மாவட்டக் கல்வி அலுவலர்கள், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரிவோர் விடுப்பை இயக்ககத்திற்கு தெரிவிக்க உத்தரவு.

5-ம் வகுப்பில் இருந்து மாணவர்களின் உடல் தகுதிக்கும் மதிப்பெண் அளிக்க முடிவு.

பள்ளி மாணவ-மாணவிகள் இடையே படிப்பை தவிர உடல் நலம் மற்றும் விளையாட்டு கலாச்சாரத்தையும் மேம்படுத்த மத்திய விளையாட்டு அமைச்சகம் தீர்மானித்துள்ளது.

அனைவருக்கும் கல்வி இயக்கம் - பகுதி நேர ஆசிரியர்களின் காலி பணியிட விவரம் 31.08.2012 அன்றைய நிலவரப்படி 03.09.2012க்குள் மாவட்ட வாரியாக அனுப்ப மாநில திட்ட இயக்குனர் உத்தரவு

அனைவருக்கும் கல்வி இயக்கம் - அரசு / அரசு உதவி பெறும் மேல்நிலை / உயர்நிலை / நடுநிலைப் பள்ளிகளில் உள்ள 6,7,8 வகுப்புகள் - 03.09.2012 & 04.09.2012 ஆகிய இரு நாட்களில் ஒன்றியத்திற்கு 5 பள்ளிகள் வீதம் மதிப்பீடு செய்து அறிக்கை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

மாண்புமிகு அமைச்சர் மற்றும் முதன்மை செயலாளர் முன்னிலையில் தொடக்கக் கல்வி - கோயம்புத்தூர் மண்டலம் சார்ந்த DEEO / AEEO / AAEEOs கலந்துகொள்ளும் பள்ளி மாணவர்களுக்கான அரசின் விலையில்லா திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் 07.09.2012 அன்று நடைபெற உள்ளது.

Thursday 30 August 2012

TNTET - Puducherry Teacher Eligibility Test (TN Region) – 2012

PG ASST 2010 - 11 - REVISED PROVISIONAL RESULTS AFTER CERTIFICATE VERIFICATION(DSE DEPARTMENT)

பதிவுமூப்பு அடிப்படையில் முதுகலை ஆசிரியர்கள் 1,185 பேர் தேர்வு


பதிவுமூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட, முதுகலை ஆசிரியர் இறுதி தேர்வுப் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது. இந்தப் பட்டியலில், 1,185 பேர் இடம் பெற்றனர். கடந்த 2010-11ம் ஆண்டு, 1,347 முதுகலை ஆசிரியரை, பதிவுமூப்பு அடிப்படையில் தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அரசு பள்ளி உள்கட்டமைப்புக்கு ரூ.129 கோடி ஒதுக்கீடு

தமிழகத்தில், அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, நபார்டு வங்கி, 129 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இதுதொடர்பாக, நபார்டு வங்கியின், தமிழ்நாடு மண்டல தலைமை மேலாளர் லலிதா வெளியிட்ட அறிக்கை: ஊரக உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதியின் கீழ், தமிழகத்தில், 31 மாவட்டங்களில் அமைந்திருக்கும், 131 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், கூடுதல் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த, 129.82 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook சேலையூர் சீயோன் பள்ளி மீது புதிய புகார்

சர்ச்சைக்குரிய சீயோன் பள்ளி மீது, பெற்றோர், புதிய குற்றச்சாட்டு ஒன்றை சுமத்தியுள்ளனர். தாம்பரத்தை அடுத்த சேலையூர் சீயோன் பள்ளி பேருந்து கட்டணம் வசூலித்துவிட்டு, ஒன்பதாம் வகுப்பு மாணவர்களை பேருந்தில் ஏற்ற மறுப்பதாக, பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 47 லட்சம் மாணவ, மாணவியருக்கு வண்ண பென்சில்கள்

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு, விலையில்லா வண்ணப் பென்சில், கணித உபகரணப் பெட்டி ஆகியவற்றை, செப்டம்பர் இறுதியில் வழங்க, பள்ளி மற்றும் தொடக்கக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 47 லட்சம் மாணவ, மாணவியருக்கு வண்ண பென்சில்கள்

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு, விலையில்லா வண்ணப் பென்சில், கணித உபகரணப் பெட்டி ஆகியவற்றை, செப்டம்பர் இறுதியில் வழங்க, பள்ளி மற்றும் தொடக்கக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.

Tuesday 28 August 2012

டி.இ.டி: தேர்ச்சி பெற்றவர்களில் 68% பேர் பெண்கள்


சென்னை: டி.இ.டி. தேர்வு மிகக் கடினமாக இருந்ததாக, தேர்வர் பலர் புலம்பிய நிலையிலும், தேர்ச்சி பெற்ற 2,448 பேரில், 1,680 பெண்கள் தேர்ச்சி பெற்று அசத்தி உள்ளனர். இதில், முதல் மற்றும் இரண்டாம் தேர்வில், முதல் மூன்று இடங்களை, ஒன்பது பேர் பிடித்தனர். இவர்களில், எட்டு பேர் பெண்கள்.

டி.இ.டி. தேர்வில், கேள்வித்தாள் வரிசை எண்ணை, விடைத்தாளில் குறிப்பிடாதவருக்கு, ஐந்து மதிப்பெண்; முக்கிய பாடத்தை குறிப்பிடாதவருக்கு, மூன்று; மொழிப் பாடத்தை குறிப்பிடாதவருக்கு இரண்டு மதிப்பெண் என, தவறு செய்தவர்களை ஆறு வகையாகப் பிரித்து, அவர்களுக்கு, "மைனஸ்&' மதிப்பெண்களை, டி.ஆர்.பி., வழங்கியுள்ளது.

மீண்டும் நடத்தப்படுகிறது ஆசிரியர் தகுதித் தேர்வு



ஆசிரியர் தகுதி தேர்வுக்கான ரிசல்ட் நேற்று (25-08-12) வெளியிடப்பட்டது. 6 லட்சத்து 76 ஆயிரத்து 763 பேர் எழுதிய தேர்வில் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெறாத 6.74 லட்சம் பேருக்கு அக்டோபர் 3ம் தேதி மீண்டும்  தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவோர் தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்று, 2009ம் ஆண்டு மத்திய அரசு சட்டம் இயற்றியது. இதன் அடிப்படையில், தமிழகத்தில் கடந்த ஜூலை 12ம் தேதி ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டது.  மாநிலம் முழுவதும் 1,027 தேர்வு மையங்களில் 6 லட்சத்து 76 ஆயிரத்து 763 பேர் தேர்வு எழுதினர். தேர்வில் பங்கேற்றவர்கள் 150 மதிப்பெண்களில் 60 சதவீதம் அதாவது 90 மதிப்பெண் எடுத்தால் மட்டுமே ‘பாஸ்’ என கூறப்பட்டிருந்தது
.

தொடக்கக் கல்வி - ஆசிரியர் வைப்பு நிதி - ஊராட்சி ஒன்றிய பள்ளி ஆசிரியர்களின் 2009 - 10ஆம் ஆண்டிற்க்கான முதனிலைப் பேரேடுகள் - திருத்தம் செய்து அனுப்ப உத்தரவு.

அனைவருக்கும் கல்வி இயக்கம் - 2011-12ஆம் கல்வியாண்டிற்கான மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளுக்கான உள்ளடங்கிய கல்வித் திட்டம் - IGNOU பயிற்சி அளிக்க உத்தரவு.

தொடக்கக் கல்வி - பள்ளிகளில் மரக்கன்றுகளை நடுவது குறித்து தேவையான மரக்கன்றுகளின் விவரங்கள் 29.08.2012க்குள் அனுப்ப இயக்குனர் உத்தரவு.

தமிழ் மின் நூலகம் - அரசால் நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள்

அகஇ - 6,7,8 வகுப்பு மாணவர்களுக்கு கற்றல் அடைவுத் திறன் மதிப்பீடு நடத்துதல் - மாநில அளவிலான பயிற்சி 30.08.2012 - மாவட்ட அளவிலான பயிற்சி 01.09.2012 - பள்ளிகளில் கற்றல் திறன் மதிப்பீடு 03.09.2012 மற்றும் 04.09.2012 ஆகிய இரண்டு நாட்கள் நடத்த உத்தரவு.

மாண்புமிகு தமிழக முதலவர் செல்வி. ஜெ. ஜெயலலிதா அவர்களின் ஓணம் திருநாள் வாழ்த்து

Friday 24 August 2012

தொடக்கக் கல்வி - மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களின் பனி இலக்கு அறிக்கை (JOB CHART) அனுப்புவது ஆய்வு செய்வது குறித்த செயல்முறைகள்.

குரூப் எஸ்.எம்.எஸ்(GROUP & BULK SMS) உச்சவரம்பு 5ல் இருந்து 20 ஆக உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.0

குரூப் எஸ்.எம்.எஸ்.,களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ள நிலையில், நாள் ஒன்றிற்கு அதிகபட்சம் 5 எஸ்.எம்.எஸ் மட்டுமே அனுப்ப முடியும் என்ற உச்சவரம்பை 20 ஆக உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

Thursday 23 August 2012

பள்ளி மாணவ, மாணவியருக்கு விளையாட்டு ஊக்கத்தொகை


விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவியருக்கு, ஊக்க உதவித் தொகை பெற, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நடப்பு கல்வியாண்டில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய ஊக்க உதவித் தொகை திட்டத்தில், உயர் நிலை மற்றும் மேல் நிலை பள்ளி விளையாட்டு மாணவர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாயும்; கல்லூரி மற்றும் பல்கலை மாணவர்களுக்கு, 13 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது.

தமிழகத்தை சேர்ந்த 22 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது


தமிழகத்தைச் சேர்ந்த, பள்ளி ஆசிரியர்கள், 22 பேருக்கு, தேசிய நல்லாசிரியர் விருதை வழங்கி, மத்திய அரசு கவுரவிக்க உள்ளது.முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான, செப்டம்பர் 5ம் தேதி, ஆண்டுதோறும், ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இத்தினத்தில், சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையில், மத்திய மற்றும் மாநில அரசுகள், நல்லாசிரியர் விருதை வழங்குகின்றன.

தொடக்கக் கல்வி - இலவச பாடநூல்கள் - 2011 - 12ஆம் கல்வியாண்டில் பாடநூல்கள் வழங்க மேற்கொண்ட போக்குவரத்து செலவினம் மற்றும் பாடநூல்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிய செலவினம் மாவட்ட வாரியாக பிரித்து காசோலையாக வழங்க உத்தரவு.

Wednesday 8 August 2012

அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணம் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கும் பொருந்தும்: தமிழக அரசு

தனியார் பள்ளிகளுக்கு அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணம் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கும் பொருந்தும் என்று தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் வசூலிக்க வேண்டிய கல்விக் கட்டணத்தை தமிழக அரசால் அமைக்க்பட்ட கல்விக் கட்டண நிர்ணயக் குழு முடிவு செய்து அறிவித்தது. இதனை எதிர்த்து சில சி.பி.எஸ்.இ.
பள்ளிகள் உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்துள்ளன.

IGNOU - TERM END RESULTS - JUNE 2012

தொடக்கக் கல்வி - 1997 - 1998 ஆம் ஆண்டுகளில் நாடுநர்கள் இல்லாமையால் SC / ST இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில் அதே இனத்தைச் சார்ந்த பட்டதாரி ஆசிரியர் கல்வித் தகுதியுடன் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் விவரங்களை கேட்டு தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு.

கல்வி உதவி கையாடல் வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றத் திட்டம்

ல்வி உதவித் தொகை கையாடல் வழக்கை சிபிசிஐடி அல்லது லஞ்ச ஒழிப்பு தடுப்புப் பிரிவுக்கு மாற்ற மாவட்டக் காவல் துறை திட்டமிட்டுள்ளது. சுகாதாரமற்ற தொழில் புரிவோர் குழந்தைகளுக்காக வழங்கப்பட்ட கல்வி உதவித் தொகையை பள்ளியில் படிக்கும் அனைத்துக் குழந்தைகளின் பெயரிலும் பட்டியல் தயாரித்து கையாடல் செய்ததாக நாமக்கல்

மாவட்டத்தில் தொடக்க, நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் 77 பேர் அண்மையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

Saturday 28 July 2012

பள்ளிச் சீருடை அணிந்தால் பஸ் கட்டணம் கிடையாது

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, அரசின் கட்டணமில்லா பேருந்து பயண அட்டை வழங்கப்படுகிறது. இந்தாண்டு முதல், பழைய முறை மாற்றப்பட்டு, சென்னை மாநகரில் வழங்கப்படுவது போன்று, அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்களிலும், கையடக்கப் பேருந்து பயண அட்டை (ஸ்மார்ட் கார்டு) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

CCE - SABL CARDS - ENGLISH

இளநிலை உதவியாளர் 5 ஆண்டுக்குள் மாவட்ட அலுவலக நடைமுறை நூல் மற்றும் பவானி சாகர் பயிற்சி தேர்ச்சி பெறாவிடில் பணிநீக்கம் / பதவியிறக்கம் செய்யப்படும் என இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

அனைவருக்கும் கல்வி இயக்கம் - கல்வி உரிமை இயக்கம் - வீதி நாடகங்கள் மூலம் இலவச கட்டாயக் கல்வி உரிமை சார்ந்த விழுப்புணர்வு ஏற்படுத்துதல் - சார்பு.

மாவட்ட கல்வி அலுவலர்களை முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு இம்மாத இறுதிக்குள் வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 பல்வேறு மாவட்டங்களில் முதன்மைக்கல்வி அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளது. மாவட்டக்கல்வி அலுவலர் பணியிலிருந்து முதன்மைக்கல்வி அலுவலராக பதவி உயர்வு வழங்க முன்னுரிமை பட்டியலும் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு இம்மாத இறுதியில் பதவி உயர்வு வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பள்ளிக்கல்வித்துறையில் மாநில பதிவு மூப்பு அடிப்படையில் 1451 சிறப்பு ஆசிரியர்கள் நியமனம் செய்வதற்கான தற்காலிக பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியீடு.

TRB PG RESULT 2012 - முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டன.

தொடக்கக்கல்வி - அரசு / அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவியருக்கு விலையில்லா காலணி வழங்குதல் - மாணவர்கள் எண்ணிக்கை 31.07.2012க்குள் பூர்த்தி செய்து அனுப்ப உத்தரவு.

சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தும் நிரந்தரம் செய்யப்படாத ஆசிரியர்கள்

அரசு மேனிலைப் பள்ளிகளில், தற்காலிகமாக பணிபுரியும், 287 தொழிற்கல்வி ஆசிரியர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரால் சான்றிதழ் சரிபார்ப்பு நடந்து இரண்டாண்டுகள் ஆகியும் இதுவரை நிரந்தரப்படுத்தவில்லை.

Key Answer for Paper I of Tamil Nadu Teacher Eligibility Test 2012

தொடக்கக்கல்வி - ஒன்றியத்திற்குள் பணி நிரவல் செய்யப்படுபவர்க்களுக்குள் முன்னுரிமை நிர்ணயம் செய்யும் போது ஒன்றியத்தில் சேர்ந்த தேதியின்படியும் மூத்தவரிலிருந்து பட்டியல் தயார் செய்து பணி நிரவல் செய்ய உத்தரவு.

Monday 23 July 2012

CCE - VIII STD - SCIENCE MODULE

பள்ளிக்கல்வித்துறை பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல், பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு கால அட்டவணை.

 23.07.2012   (§fŸ)
khWjš fyªjhŒÎ (mnj kht£l«) (mid¤J ghl g£ljhç MÁça®fŸ, MÁça® gæ‰We®, Ïilãiy MÁça®fŸ cl‰fšé k‰W« Áw¥ghÁça®fŸ)
r«kªj¥g£l kht£l Kj‹ik¡ fšé mYty®fshš el¤j¥gL« (Kj‹ik¡ fšé mYty®fshš fyªjhŒÎ eilbgW« Ïl« bjçÎ brŒJ m¿é¡f¥gL«)

NHIS - 2012 EMPLOYEE FORMS & SPOUSE CERTIFICATE AS PER TN GOVT GUIDELINES..

தொடக்கக்கல்வி - RTEன்படி உபரி இடைநிலை ஆசிரியர்களை பணி நிரவல் செய்தல் மற்றும் 2012 - 13ஆம் கல்வி ஆண்டுக்குரிய பொது மாறுதல்.

Thursday 12 July 2012

பள்ளிக்கல்வித்துறை - அனைத்து வகை அரசு மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை, தொடக்கப்பள்ளிகள், மாநகராட்சி, மெட்ரிக், ஆங்கிலோ - இந்தியன் மற்றும் அரசு உதவிப்பெரும் பள்ளிகளில் 2012 - 2013 CCE நடைமுறைப்படுத்தி ஆணையிடப்பட்டது - திட்டங்கள் சிறப்பாக அமைய பள்ளி நடைமுறையில் சில மாற்றங்கள் மேற்கொள்ளல் - ஆணை வெளியிடப்பட்டுள்ளது

தொடக்கக் கல்வி - RTE 2009 அடிப்படையில் பள்ளிகளில் நலிந்த பிரிவினர் மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினருக்கு 25 விழுக்காடு மாணவர் சேர்க்கை ஒதுக்கீடு செய்த விவரம் தொடக்கக்கல்வி இயக்குநர் கோரியுள்ளார்.

RTE 2009-ன்படி தொடக்கக் கல்வி இயக்கத்தில் கட்டுப் பாட்டில் உள்ள PU / MUNICIPAL / GOVT தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர் மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர் / பட்டதாரி ஆசிரியர் பணியடங்களை கூடுதல் தேவை உள்ள பள்ளிகளுக்கு பணிநிரவல் செய்திடல்- ஆணை வெளியீடு.

தொடக்கக்கல்வி - 2012 - 2013 ஆம் ஆண்டுக்குரிய உபரியாக உள்ள பணியிடங்கள் - பணிநிரவல் மற்றும் பொதுமாறுதல் கால அட்டவணை வெளியிட்டு தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு.


தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 04404 / இ1 / 2012 , நாள். 11.07.2012

Saturday 30 June 2012

மாவட்ட அறிவியல் மையத்தில் நடைபெறவிருக்கும் அறிவியல் போதிக்கும் ஆசிரியர்களுக்கான பணிமனையில் கலந்துகொள்ள ஆசிரியர்களை தலைமையாசிரியர்கள் விடுவித்து அனுப்ப உத்தரவு.

பள்ளிக்கல்வி - அரசு மற்றும் அரசு அங்கரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் பள்ளிக்கு வரும் போது தமது பதவிக்குரிய கண்ணியத்திற்கு சிறிதும் களங்கம் ஏற்படாத வகையில் ஆடை, அணிகலன்கள் அணிந்து வருமாறு உத்தரவு.

Wednesday 27 June 2012

TNTET 2012 - LIST OF EXAM VENUE / CHECK YOUR APPLICATION STATUS


                         Tamil Nadu Teachers Eligiblity Test 2012

horizontal rule
I.  List of Candidates
    enter your Application No. (eg.0100001)
           (for all the candidates who have applied for Examination)
                                                      App No.      
EXAMINATION TIME TABLE

Tamil Nadu Teacher Eligiblity Test 2012
 I. List of Admitted candidates                                      -        656088
Date of Examination: 12.07.2012 Thursday
Paper I Timing: 10:30 A.M to 12 Noon
Paper II Timing: 02:30 P.M to 04:00 P.M
Paper Both : (Paper I Timing and Paper II Timing)
           

Dated: 25-06-2012

Chairman

Government of Tamil Nadu Directorate of Government Examinations Higher Secondary Examination March 2012 Application for Revaluation / Retotalling of Answer Script Instructions to Applicants Download Bank Challan for Payment File Your Application Online

Government of Tamil Nadu
Directorate of Government Examinations
Higher Secondary Examination March 2012


Application for Revaluation / Retotalling of Answer Script



Technical Education – Scheme of Community Development Through Polytechnics (CDTP) – Release of grants to selected institutions for 2011-2012 – Sanctioned – Orders – Issued.

QUESTIONNAIRE - CUM - TRAINING MODULE & FILL UP INSTRUCTIONS




2012-13 ஆம் கல்வியாண்டு - ஆசிரியர் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு - சில நெறிமுறைகள் வழங்கி தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.


 தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 09502 / டி 1 / 2012 , நாள். 26.06.2012

அரசாணை எண். 107ன் படி 10+2+3 மற்றும் 11+1+3 முடித்தவர்களுக்கு மட்டும் உரிய பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்றும் 3 ஆண்டு பட்டப்படிப்பு முடித்த பின்பு +2 முடித்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்க கூடாது என தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.   

பட்டதாரி ஆசிரியர் நியமனம்: ஜூலை 1-ல் மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு


பட்டதாரி மற்றும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் காலியிடங்களை (2010-11) பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்புவதற்காக ஜூலை 1-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு மீண்டும் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி - 01.01.2012ன் படி 2012-13ம் கல்வியாண்டிற்கான அரசு / நகராட்சி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதிவாய்ந்தோர் பட்டியல் மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் பதவி மாறுதல் மூலம் முதுகலை ஆசிரியர் பட்டியல் வெளியிடப்பட்டது. 28.06.2012 மற்றும் 29.06.2012 கலந்தாய்வில் கலந்துகொள்ள வேண்டியவர்களின் விவரம் - சார்பு.


 பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 111300 / சி1 / இ1 / 2011 , நாள். 26.06.2012

Tuesday 26 June 2012

தொடக்கக்கல்வி - தொடக்கக் கல்வி இயக்ககம் மற்றும் சார்நிலை அலுவலகங்களில் உள்ள தற்காலிக பணியிடங்களுக்கு 01.01.2012 முதல் 31.12.2014 வரை பணிநீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவு

பள்ளிக்கல்வி - TNPSC தேர்வுகள் - குரூப் 4 மற்றும் குரூப் 8 தேர்வுகள் நடைபெறுவதை முன்னிட்டு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அன்றைய தினம் (07.07.2012) விடுமுறை அளித்து உத்தரவு

மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் ஆய்வு கூட்ட அறிவுரைகள் -பள்ளிகல்வி இயக்குனர் செயல்முறை

முப்பருவமுறை ( Trimester) மற்றும் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை (CCE) 2012 - 2013 ஆம் கல்வி ஆண்டு முதல் நடைமுறைப்படுத்துதல் சார்ந்த வெளியிடப்பட்ட அரசாணை 143 - 19.11.2011க்கு திருத்த ஆணை 140 வெளியீடு

ஆசிரியர் தகுதித் தேர்வு 2012 (TNTET 2012) - அனைத்து மாணவர்களின் தேர்வு மைய விவரம்- Tamil Nadu Teachers Eligiblity Test 2012 - Venue wise Individual Query for the Candidate

    Tamil Nadu Teacher Eligiblity Test 2012


 I. List of Admitted candidates                                      -        656088

Date of Examination: 12.07.2012 Thursday
Paper I Timing: 10:30 A.M to 12 Noon

Paper II Timing: 02:30 P.M to 04:00 P.M
Paper Both : (Paper I Timing and Paper II Timing)

தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கட்டுபாட்டில் உள்ள தொடக்க / நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான 2012 - 13 பொது மாறுதல் கலந்தாய்விற்கான தேதி மற்றும் கலந்தாய்வு நடத்தும் மையங்கள் மாவட்ட வாரியாக வெளியீடு.




தலைமை ஆசிரியர்களும் பாடம் நடத்த வேண்டும்: பள்ளி கல்வி இயக்ககம்


அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், அவர்கள் பட்டம் பெற்றுள்ள பாடத்தில், எட்டு பாட வேளைகளில் கற்பிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் தலைமையாசிரியர்களாக பணியாற்றுபவர்கள், வாரத்திற்கு 10 பாட வேளைகள் மாணவர்களுக்கு கற்பித்தல் பணி செய்ய வேண்டும் என கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பள்ளி தலைமையாசிரியர்கள் பலர், தங்களது அலுவலகப் பணிகளை மட்டும் பார்த்துவிட்டு, மாணவர்களுக்கு கற்பித்தல் பணிகளை செய்வதில்லை.

9 கள்ளர் பள்ளிகளை தரம் உயர்த்தி தமிழக முதல்வர் உத்தரவு.

தொடக்கக் கல்வி - அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆய்வு கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது.


 அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆய்வு கூட்டம் சென்னை தொடக்கக்கல்வி இயக்ககத்தில் இன்று 25.06.2012 நடைபெறவுள்ளது. இந்த ஆய்வு கூட்டத்தில் அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் தவறாமல் கலந்து கொள்ள தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களுக்கான பணிமாறுதல் மற்றும் பதவி உயர்வு பெற்றவர்களின் விவரம்



TNPSC - TENTATIVE ANSWER KEY FOR EXAMINATIONS

தனியார் கல்லூரிகளில் பி.எட் : கல்விக் கட்டணம் விரைவில் அறிவிப்பு


தனியார் சுயநிதி கல்வியியல் கல்லூரிகளில் பி.எட். படிப்புக்கான கல்விக் கட்டணம் குறித்து நீதிபதி பாலசுப்பிரமணியன் கமிட்டி அடுத்த வாரம் அறிவிப்பு வெளியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 7 அரசு கல்வியியல் கல்லூரிகளும், 14 அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளும், 647 தனியார் சுயநிதி கல்வியியல் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பி.எட். படிப்புக்கு ஏறத்தாழ 2,500 இடங்களும், தனியார் கல்லூரிகளில் 66 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களும் உள்ளன.

பள்ளிக்கல்வி - 2012 - 2013 ஆம் கல்வி ஆண்டு முதல் முப்பருவமுறை மற்றும் தொடர் மதிப்பீட்டு முறை நடைமுறைப்படுத்துதல் சார்ந்த வெளியிடப்பட்ட அரசாணைக்கு திருத்தம் வெளியிடுதல் - ஆணை வெளியிடப்படுகிறது.


அரசாணை எண். 140 பள்ளிக்கல்வி (வி1)துறை நாள். 11.06.2012

Monday 18 June 2012

சமச்சீர் கல்வியால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு


சமச்சீர் கல்வி முறை அமலால், மாநிலம் முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த கல்வியாண்டு முதல் ஒன்றாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி முறை அமலானது. இந்த முறையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் அரசு மற்றும் நகராட்சி பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை விகிதம் அதிகரித்து வருவதாக அதிகாரிகள் கூறினர்.

விடைத்தாள்கள் மறுமதிப்பீடு, மறுகூட்டலுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கும் வசதி


பிளஸ் 2 விடைத்தாள்கள் மறுமதிப்பீடு செய்யவும் மறுகூட்டலுக்கு, இணையதளத்தின் வழியாக விண்ணப்பம் செய்யலாம் என்று தேர்வுத்துரை அறிவித்துள்ளது. மாணவர்களுக்கு ஏற்படும் கால தமாதத்தை தவிர்க்க அரசு தேர்வு இயக்குனரகம் இந்தாண்டு முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கும் வசதியை ஏற்படுத்தியுள்ளது.

TRIMESTER & CCE 2012 - 13 ஆம் கல்வியாண்டில் 1 - 8 வகுப்புகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது - நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்வது சார்ந்து.


தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 30193 / ஜே 2 / 2011, நாள்.    .06.2012 
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் அறிவிப்பு - மாணாவர்களின் புத்தக சுமையை குறைக்க மூன்று பருவ பாடத்திட்டத்தையும் (Trimester) முழுமையான மற்றும் தொடர் மதிப்பீட்டு முறையையும் (CCE) 2012 - 13 ஆம் கல்வியாண்டில் 1 - 8 வகுப்புகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது - நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்வது சார்ந்து.

Saturday 16 June 2012

அனைவருக்கும் கல்வி இயக்கம் - வேலூர் மாவட்டம் - பகுதி நேர சிறப்பாசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டது - தெளிவுரைகள் வழங்கி உத்தரவு.

வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண். 110 / அ 1 /

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அங்கில மொழிவழிக்கல்வி பயிலும் BC / MBC / DNC மாணவர்களுக்கு கற்பிப்புக் கட்டணம் (TUITION FEES).


திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவரின்  செயல்முறைகள் ந.க.எண். 8998 / 2012 / க1, நாள்.  13.06.2012
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அங்கில மொழிவழிக்கல்வி பயிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம்  ரூ.100000 /- க்கு மிகாமலும், குடும்பத்தில் எவரும் பட்டதாரி இல்லை என்ற நிபந்தனைகளுக்குட்பட்டும் மிகப் பிற்படுத்தப்பட்ட / சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த மாணவர்களுக்கு எவ்வித நிபந்தனையுமின்றியும் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டொன்றிற்கு ரூ.200 /-ம், 9 ஆம் மாணவர்களுக்கு ரூ.250 /-ம், 11 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கு ரூ.500 /- ம் கற்பிப்புக் கட்டணமாக (TUITION FEES) அரசால் வழங்கப்படுகிறது.    வழங்கப்படுகிறது. . நன்றி : மணிகண்டன்.

பள்ளிக்கல்வி - 2012 - 13 ஆம் கல்வி ஆண்டில், 100 அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலைப்பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாக நிலை உயர்த்துதல் மற்றும் பணியிடங்கள் தோற்றுவித்தல் - ஆணை வெளியிடப்பட்டுள்ளது


அரசாணை எண். 137 பள்ளிக்கல்வி(மேநிக)துறை நாள்.08.06.2012  
பள்ளிக்கல்வி - 2012 - 13 ஆம் கல்வி ஆண்டில், 100 அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலைப்பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாக நிலை உயர்த்துதல் மற்றும் பணியிடங்கள் தோற்றுவித்தல் - ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

Saturday 9 June 2012

தொடக்கக் கல்வி - வழக்குகள் - சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் கிளையில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் சார்பாக மாவட்ட வாரியாக சீராய்வு மேற்கொள்ள இயக்குநர் உத்தரவு.


தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண். 2500 / எப்1 / 2012, நாள்.07.06.2012
தொடக்கக் கல்வி இயக்ககத்தின் சார்பாக சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் கிளையில் நிலுவையிலுள்ள வழக்குகள், தீர்ப்பாணை வழங்கப்பட்டு செயல்படுத்தாத வழக்குகள் மற்றும் எதிரவாதவுரை தாக்கல் செய்த மற்றும் செய்யப்படாமல் நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் சார்ந்த விவரங்கள் கொண்டுவர தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
எனவே சார்ந்த மாவட்டங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் சார்ந்த கோப்புகள் எதுவும் விடுபடாமல் படிவத்தில் பூர்த்தி செய்து நேரில் தவறாமல் ஆஜராகுமாறு தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
நாள். 12.06.2012 முதல் 22.06.2012
மாவட்ட வாரியாக ஆய்வு நிரல் :- 

12.06.2012 - காலை 9-30 மணி - சென்னை,திருவள்ளூர்,வேலூர்,காஞ்சிபுரம்
13.06.2012 - காலை 9-30 மணி - கிருட்டிணகிரி,திருவண்ணாமலை,விழுப்புரம், கடலூர்
14.06.2012 - காலை 9-30 மணி - தருமபுரி,நாமக்கல்,சேலம்
15.06.2012 - காலை 9-30 மணி - திருச்சி,பெரம்பலூர்,அரியலூர்,கரூர்
16.06.2012 - காலை 9-30 மணி - தஞ்சை,நாகை,திருவாரூர்,புதுக்கோட்டை
18.06.2012 - காலை 9-30 மணி - ஈரோடு,திருப்பூர்,கோவை,நீலகிரி
19.06.2012 - காலை 9-30 மணி - திண்டுக்கல்,தேனி,திருநெல்வேலி
21.06.2012 - காலை 9-30 மணி - சிவகங்கை,இராமநாதபுரம்,தூத்துக்குடி
22.06.2012 - காலை 9-30 மணி - மதுரை,கன்னியாகுமரி,விருதுநகர்

Announcements - District Revenue Administration - Issue of Community, Nativity and Income certificates to all sixth standard students studying in all schools of Tamil Nadu - Implementation of the Scheme - Orders issued.


G.O.Ms.No.184 Revenue [RA.3(2)] Department Dated 05.06.2012.
Announcements - District Revenue Administration - Issue of Community, Nativity and Income certificates to all sixth standard students studying in all schools of Tamil Nadu - Implementation of the Scheme - Orders issued.

TNPSC GROUP - II RESULTS RELEASED.


POSTS INCLUDED IN C.S.S.E-I, 2010 DATE OF EXAMINATION : 30.07.2012

மேல்நிலைக்கல்வி பணி - 2012 - 2013 ஆம் ஆண்டிற்கு பள்ளி வாரியானமிதிவண்டிகளுக்கான உத்தேச தேவைப்பட்டியல் கோருதல்.


இயக்குனர், பிற்படுத்தப்பட்டோர் நலம், சேப்பாக்கம், சென்னை - 600005 நேர்முக எண். டி1 / 3133 / 2012, நாள். 29.05.2012 
மேல்நிலைக்கல்வி பணி - மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் - 2012 - 2013 ஆம் ஆண்டிற்கு பள்ளி வாரியான / இன வாரியான மாணவ / மாணவியருக்கு வழங்கப்பட வேண்டிய மிதிவண்டிகளுக்கான உத்தேச தேவைப்பட்டியல் கோருதல்.

Thursday 31 May 2012

2012 - 2013 SSAன் வின் ஆசிரியர்களுக்கான பயிற்சித் திட்டம் - இயக்குனரின் கடிதம்

Teacher Eligibility Test - English Question Answer -2


Choose the suitable collective nouns
* A---------------- of birds flew high on the sky
(a) group (b) Feather (c) number (d) flight
* We saw a --------------- of sheep on our way home
(a) Flock  (b)flight (c) fleet (d) herd

புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கும் தேதியில் மாற்றம்.

புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் உள்ள பள்ளிகளில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கும் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஜூன் முதல் தேதியன்று திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது, தற்போது ஜூன் 4 ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அக்னி வெயில் முடிந்த பிறகும் யூனியன் பிரதேசங்களில் வெப்பம் தணியாமல் இருப்பதால் பள்ளிகள் திறக்கும் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடை விடுமுறையில் பயிற்சி - ஆசிரியர்களுக்கு 2 நாள்கள் ஈடுசெய் விடுப்பு வழங்க கோரிக்கை.

மே 29 முதல் 31 வரை நடைபெறுக்கின்ற முப்பருவ கல்வி முறை, தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை தொடர்பான பயிற்சியில் பங்கேற்று பயிற்சி பெறும் ஆசிரியர்களுக்கு 2 நாள்கள் ஈடுசெய் விடுப்பு வழங்க வேண்டுமெனத் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Wednesday 30 May 2012

இடைநிலைக் கல்வி - அரசு உதவி பெறும் பள்ளி - முதன்மை பாடத்தினை கொண்டு பி.எட்., முடித்தவர்களுக்கு மட்டும் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு - RTI கடிதம் மூலம் தெளிவுரை.

பொது தகவல் வழங்கும் அலுவலர் மற்றும் தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (இடைநிலைக்கல்வி) செயல்முறைகள், சென்னை - 06                            
ந.க.எண். 75417 / டி2 / இ2 / 2012, நாள்.   .12.2011
    

பொருள் :
இடைநிலைக் கல்வி - உதவி பெறும் பள்ளி - தகவல்               அறியும் உரிமைச் சட்டம் - 2005-ன் கீழ் விபரங்கள் கோருதல் சார்பு.
பார்வை :
உதவிப்பதிவாளர், தமிழ்நாடு தகவல் ஆணையம் தேனாம்பேட்டை அவர்களின் ஆணை எண்.26088 / C / 2011, நாள். 28.08.2011
                                                                      **************
      பார்வையில் காணும் கடிதத்தின் வாயிலாக  திருமதி. ஜீவாகமலக்கண்ணன் என்பார் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் படி கோரியுள்ள தகவல்களுக்கு பின்வருமாறு விபரம் அளிக்கப்படுகிறது.
வினா எண்.1

                     அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் (சிறுபான்மையற்றது) இடைநிலை ஆசிரியர் ஒருவர் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெறுகிறார். அதே பள்ளியில் 20 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியராக (பொருளாதாரத்தில் B. Ed.,) படித்து பட்டதாரி ஆசிரியர் தகுதியுடன் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். நான் மேற்கண்ட பதவி உயர்வு பெற்ற இடைநிலை ஆசிரியர் பணியிடத்தில் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற முடியுமா? அதே போல் எனக்கு கீழ் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் தமிழ், வரலாறு பாடத்தில் B.Ed., பயின்று பட்டதாரி ஆசிரியர் தகுதி பெற்றுள்ளார்கள்.  என்னுடைய இடைநிலை ஆசிரியர் காலி பணியிடத்தில் பட்டதாரி ஆசிரியர்களாக ஒன்றன்பின் ஒன்றாக பதவி உயர்வு பெற முடியுமா?

பதில் : 
            அரசு உதவி பெறும் உயர் / மேல்நிலைப்பளிகளில் (சிறுபான்மையற்றது) எந்த பாடங்களில் பட்டதாரி ஆசிரியர் பணியிடம் காலிப் பணியிடமாக உள்ளதோ, அந்த பாடத்தினை முதன்மை பாடமாகக் கொண்டு பி.எட்.,பயின்று முடித்து பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு தகுதியுடைய இடைநிலை ஆசிரியர்கள் மட்டுமே பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்விற்கு தகுதியுடையவர்கள் ஆவர். அவர்களை கொண்டே பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் (பாடவாரியாக) நிரப்பப்பட வேண்டும்.

Saturday 26 May 2012

எம்.பி.பி.எஸ்.: சுயநிதி அரசு ஒதுக்கீடு கட்-ஆஃப்.



எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர இந்த ஆண்டும் கடும் கட்-ஆஃப் மதிப்பெண் போட்டி ஏற்பட்டுள்ளதால் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடமாவது கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு மாணவர்களிடையே எழுந்துள்ளது.  தமிழகத்தில் உள்ள 11 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 1,460 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன.

SCERT - CCE TRAINING PROGRAMME SCHEDULE FOR UPPER PRIMARY HMs & TRs.

State Council of Educational Research and Training.
2Days CCE Training for Upper Primary HMs & TRs.
First Spell      : 28th and 29th of May.
Second Spell : 30th and 31st of May.
2 Days Programme :-
Day I            : 9.30am to 5.30pm.
Day II           : 10.00am to 5.00pm.
To Download Training Programme Schedule Click Here... 

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு.

தமிழக அரசின் செய்தி வெளியீடு எண். 312 நாள். 25.05.2012
2012 - 2013 ஆம் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகள் மற்றும் விடுதிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர் / காப்பாளர், பட்டதாரி ஆசிரியர் / காப்பாளர், சி றப்பு ஆசிரியர்கள், ஆரம்ப / நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் மாவட்ட மாறுதல் வழங்கும் பொது மாறுதல்  கலந்தாய்வுகள் ஆணையர் தலைமையில் நடைபெற உள்ளது. 

டி.இ.டி., தேர்வில் யாருக்கு விலக்கு? ஆசிரியர் பலரும் குழப்பம்.

டி.இ.டி., தேர்வில் இருந்து,  யார், யாருக்கு விலக்கு என்பது குறித்து, ஆசிரியர் தேர்வு வாரியம் தெளிவான விளக்கம் அளிக்காததால், நேற்று ஏராளமானோர் டி.ஆர்.பி., அலுவலகத்திற்கு படையெடுத்தனர்.
ஆகஸ்ட் 23, 2010க்குப் பின் பணியில் சேர்ந்த, அனைத்து வகை பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர், டி.இ.டி., தேர்வை எழுத வேண்டும் என, டி.ஆர்.பி., ஆரம்பத்தில் தெரிவித்தது. அறிவிப்பு தற்போது, என்.சி.டி.இ., வழிகாட்டுதலின்படி, ஆகஸ்ட் 23, 2010க்கு முன், ஆசிரியர் நியமனம் தொடர்பான அறிக்கை மற்றும் இதர பணிகள் நடந்து, அதன்பின் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் டி.இ.டி., தேர்வை எழுத தேவையில்லை என, 22ம் தேதி, ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்தது.

CCE பயிற்சி - விடுமுறையில் உள்ள ஆசிரியர்கள் தமிழகத்தில் எங்கு வேண்டுமானாலும் பயிற்சியில் கலந்து கொள்ளலாம் - இயக்குநர் உத்தரவு.

மாநிலக் கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 796 / ஈ2 / 2012, நாள். 25.05.2012.
ஆசிரியர்கள்  எந்த  மாவட்டத்தில் பணிபுரிந்தாலும் தற்போது எந்த மாவட்டத்தில் விடுமுறையை கழிக்க சென்றிருந்தால் அந்த மாவட் டத்தில் அவர்கள் வீட்டுக்கு அருகில் உள்ள பயிற்சி மையத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கலாம்.

Monday 30 April 2012

மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கும் சத்துணவு....... "வெரைட்டி ரைஸ்" வழங்குவது பற்றி கருத்து கேட்பு



தொடர் கல்வியை ஊக்கப்படுத்த மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கும் சத்துணவு வழங்கவும், "வெரைட்டி ரைஸ்" வழங்கினால், குழந்தைகள் விரும்பி சாப்பிடுவரா என்பது குறித்து கருத்து கேட்கப்பட்டுள்ளது.

பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வு 7,000 விண்ணப்பங்கள் விற்பனை


திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் தகுதி தேர்வு எழுத
மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். இதுவரை, 7,000 விண்ணப்பங்கள் விற்றுத்
தீர்ந்துள்ளன. அதனால், இன்னும் 3,000 விண்ணப்பங்கள் அனுப்பி வைக்குமாறு
ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இடைநிலை ஆசிரியர்கள் மாறுதல் விண்ணப்பம்: 30ம் தேதிக்குள் அளிக்க ஆசிரியர்களுக்கு உத்தரவு


திருநெல்வேலி:தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் பொதுமாறுதல் விண்ணப்பங்களை வரும் 30ம் தேதிக்குள் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தயாராக இருக்க மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் ஆசிரியர்கள் பொது இட மாறுதல் கவுன்சிலிங் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படுகிறது. இதில் தகுதியானவர்களுக்குஇடமாறுதல் ஆணைகள் வழங்கப்படுகிறது. இதில் 2012-13ம் ஆண்டில் இட மாறுதல் கோரும் இடைநிலை ஆசிரியர்கள் வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சிறப்பு ஆசிரியர்களுக்கு வரும் 28ல் "கவுன்சிலிங்'


திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நடுநிலை, உயர்நிலைப்பள்ளிகளில் காலியாக இருந்த உடற்கல்வி, தையல், ஓவியம், இசை,
தோட்டக்கலை உள்ளிட்ட சிறப்பு ஆசிரியர் பணியிடங்கள், எஸ்.எஸ்.ஏ., மூலம்
நிரப்பப்பட்டுள்ளன. மொத்தம் 429 சிறப்பு ஆசிரியர்கள்
நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆசிரியர் மாறுதலுக்கு கலந்தாய்வு கூட்டம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், மாவட்டதிற்குள் ஆசிரியர் மாறுதலுக்கும், மாவட்டம் விட்டு மாவட்டம் ஆசிரியர் மாறுதலுக்கான கலந்தாய்வும், வரும் 19, 20ம் தேதிகளில் நடக்கிறது. முதன்மை கல்வி அலுவலர் மூர்த்தி வெளியிட்ட அறிக்கை: அரசு உயர்நிலைப்பள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளி, நகராட்சி மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர்கள், இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள் ஆகிய ஆசிரியர்களுக்கு கிருஷ்ணகிரி முதன்மை கல்வி அலுவலரால் மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

அதிமுக ஆட்சியில் சமச்சீர் என்றால் கசக்கிறது

சென்னை : சமச்சீர் கல்வி என்றாலே அதிமுக ஆட்சிக்கு எட்டிக்காய் போல கசக்கிறது என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து திமுக தலைவர் தனது கேள்வி பதிலில் கூறியிருப்பதாவது: இலங்கையில் மசூதி இடிப்புப் பிரச்னை குறித்து நாளேடுகள் செய்தி வெளியிட்டுள்ளனவே?
இலங்கை மாத்தளை மாவட்டத்தில், தம்புள்ளா என்ற இடத்தில் இருந்த மசூதி ஒன்றை சில நாட்களுக்கு முன்பு, 2000க்கும் மேற்பட்ட புத்த பிட்சுகள் கடப்பாரை சம்மட்டிகள் கொண்டு இடித்துடைத்து நாசம் செய்திருக்கின்றனர் என்று ஒரு செய்தி தெரிவிக்கின்றது.

iQOO Neo 7: An Affordable High-Performance Smartphone

  iQOO is a brand that has quickly gained popularity in the smartphone market for its affordable high-performance devices. The iQOO Neo 7 is...